ஜெபமாலை | Rosary in tamil

 


ஜெபமாலை

  • அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம் சிலுவை அடையாளம் 
    • அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

      தூய ஆவி செபம் 

      பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். 
      தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். 
      உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி
      வாரும்.
       வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். 
      உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. 
      அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
      உலர்ந்ததை நனையும். 
      நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். 
      வணங்காதை வணங்கப் பண்ணும். 
      குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். 
      தவறினதை செம்மையாய் நடத்தும். 
      உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழும்  கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

      துவக்க செபம்

      அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுவரா சுவாமி நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற
      அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திரு சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடையஅளவில்லாத தயையை நம்பிக் கொண்டு ,தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம் . இந்தச் செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி . ஆமென் .

      விசுவாச அறிக்கை

    • விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த /
      • எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.

        • அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர்

        இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.

        • இவர் தூய ஆவியாரால் கருவாகி /

        தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

        • பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
        • பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் /

        இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

        • விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய /

        கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

        • அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /

        தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

        • தூய ஆவியாரை நம்புகிறேன்.
        • தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /
        • புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
        • பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
        • உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
        • நிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.

        கிறிஸ்து கற்பித்த செபம் (புதிய வடிவம்)

        விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
        உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
        உமது ஆட்சி வருக!
        உமது திருவுளம்
        விண்ணுலகில் நிறைவேறுவது போல
        மண்ணுலகிலும் நிறைவேறுக!
        எங்கள் அன்றாட உணவை
        இன்று எங்களுக்குத் தாரும்.
        எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
        நாங்கள் மன்னிப்பது போல
        எங்கள் குற்றங்களை மன்னியும்.
        எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
        தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.



        மங்கள வார்த்தை செபம் (புதிய வடிவம்)

        அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
        ஆண்டவர் உம்முடனே.
        பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
        உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
        இயேசுவும் ஆசி பெற்றவரே.
        தூய மரியே,
        இறைவனின் தாயே,
        பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
        இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
        வேண்டிக்கொள்ளும். - ஆமென்.




        திரித்துவப் புகழ்(புதிய வடிவம்)

        தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்
        மாட்சிமை உண்டாகுக.
        தொடக்கத்தில் இருந்ததுபோல
        இப்பொழுதும் எப்பொழுதும்
        என்றென்றும் இருப்பதாக. ஆமென்.



        ஓ என் இயேசுவே! 
            ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்.

        செபமாலை மறைபொருள்கள்

        மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கட்கிழமை & சனிக்கிழமை)

        1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தல் 
        2. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் 
        3. இயேசுவின் பிறப்பு. 
        4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தல் 
        5. காணாமற் போன இயேசுவைக் கண்டு மகிழ்தல் 



        ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக்கிழமை)

        1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப்  பெறுதல் 
        2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை
          இரசமாக மாற்றுதல்  
        3. இயேசு இறையரசை பறைசாற்றி, மனமாற்றத்திற்கு அழைத்தல் 
        4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைதல் 
        5. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை நிறுவுதல் 



        துயர்  நிறை மறை உண்மைகள் (செவ்வாய்க்கிழமை & வெள்ளிக்கிழமை)

        1. இயேசு இரத்த வியர்வை சிந்துதல் . 
        2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபடுதல் . 
        3. இயேசுவுக்கு  முள்முடி தரித்தல் . 
        4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் . 
        5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தல் 



         மாட்சி  நிறை மறை உண்மைகள் (ஞாயிற்றுக்கிழமை & புதன்கிழமை)

        1. இயேசு உயிர்த்தெழுந்தார் 
        2. இயேசுவின் விண்ணேற்றம்
        3. தூய ஆவியாரின் வருகை. 
        4. இறையன்னையின் விண்ணேற்பு. 
        5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பெறல் 



        ஜெபமாலை நிறைவில்:  
                         அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம். ஆமென். 




        புனித தேவமாதாவின் பிராத்தனை   


        சுவாமி கிருபையாயிரும்

        கிறிஸ்துவே கிருபையாயிரும்

        சுவாமி கிருபையாயிரும்


        கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

        கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்


        பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

        உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

        தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி



        புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

        சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...

        கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...

        மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...

        கிறிஸ்துவினுடைய மாதாவே...

        தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...

        மகா பரிசுத்த மாதாவே...

        அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..

        பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...

        கன்னி சுத்தங்கெடாத மாதாவே...

        மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...

        ஆச்சரியத்துக்குரிய மாதாவே...

        நல்ல ஆலோசனை மாதாவே,,,

        சிருஷ்டிகருடைய மாதாவே...

        இரட்சகருடைய மாதாவே...

        மகா புத்தியுடைத்தான கன்னிகையே...

        மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...

        பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...

        சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...

        தயையுள்ள கன்னிகையே...

        விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....

        தருமத்தின் கண்ணாடியே...

        ஞானத்துக்கு இருப்பிடமே...

        எங்கள் சந்தோஷத்தின் காரணமே...

        தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...

        ஞான பாத்திரமே...

        மகிமைக்குரிய பாத்திரமே...

        அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...

        தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...

        தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...

        சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...

        வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...

        பரலோகத்தினுடைய வாசலே...

        விடியக்காலத்தின் நட்சத்திரமே...

        வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...

        பாவிகளுக்கு அடைக்கலமே...

        கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...

        கிறிஸ்தவர்களுடைய சகாயமே...

        சம்மனசுக்களுடைய இராக்கினியே...

        பிதா பிதாக்களுடைய இராக்கினியே...

        இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...

        அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...

        மறைசாட்சிகளுடைய இராக்கினியே...

        துதியர்களுடைய இராக்கினியே...

        கன்னியர்களுடைய இராக்கினியே...

        அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...

        ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...

        பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...

        திருச் செபமாலையின் இராக்கினியே...

        சமாதானத்தின் இராக்கினியே...



        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்



        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்



        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும்
                  
        சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



        ஜெபிப்போமாக :
       
                   
        இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின்
        சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்




        கிருபை தயாபத்து மந்திரம்

        •  கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். 
        • இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். 
        • ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். 
        • இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். 
        • கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

        - இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக

        - சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

        ஜெபிப்போமாக:
                    
        சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
 



        Comments

        1. https://jebamalaiseivom.blogspot.com/p/rosary.html

          ReplyDelete

        Post a Comment

        Popular posts from this blog

        Jebamalai | Rosary in tamil | Prayer | Roman Catholic Prayer in tamil