Jebamalai | Rosary in tamil | Prayer | Roman Catholic Prayer in tamil

  


ஜெபமாலை

  • அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம் சிலுவை அடையாளம் 
    • அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

      தூய ஆவி செபம் 

      பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். 
      தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். 
      உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி
      வாரும்.
       வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். 
      உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. 
      அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
      உலர்ந்ததை நனையும். 
      நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். 
      வணங்காதை வணங்கப் பண்ணும். 
      குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். 
      தவறினதை செம்மையாய் நடத்தும். 
      உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழும்  கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

      துவக்க செபம்

      அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுவரா சுவாமி நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற
      அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திரு சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடையஅளவில்லாத தயையை நம்பிக் கொண்டு ,தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம் . இந்தச் செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி . ஆமென் .

      விசுவாச அறிக்கை

    • விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த /
      • எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.

        • அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர்

        இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.

        • இவர் தூய ஆவியாரால் கருவாகி /

        தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

        • பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
        • பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் /

        இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

        • விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய /

        கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

        • அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /

        தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

        • தூய ஆவியாரை நம்புகிறேன்.
        • தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /
        • புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
        • பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
        • உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
        • நிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.

        கிறிஸ்து கற்பித்த செபம் (புதிய வடிவம்)


        விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
        உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
        உமது ஆட்சி வருக!
        உமது திருவுளம்
        விண்ணுலகில் நிறைவேறுவது போல
        மண்ணுலகிலும் நிறைவேறுக!
        எங்கள் அன்றாட உணவை
        இன்று எங்களுக்குத் தாரும்.
        எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
        நாங்கள் மன்னிப்பது போல
        எங்கள் குற்றங்களை மன்னியும்.
        எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
        தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.



        மங்கள வார்த்தை செபம் (புதிய வடிவம்)


        அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
        ஆண்டவர் உம்முடனே.
        பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
        உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
        இயேசுவும் ஆசி பெற்றவரே.
        தூய மரியே,
        இறைவனின் தாயே,
        பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
        இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
        வேண்டிக்கொள்ளும். - ஆமென்.




        திரித்துவப் புகழ்(புதிய வடிவம்)

        தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்
        மாட்சிமை உண்டாகுக.
        தொடக்கத்தில் இருந்ததுபோல
        இப்பொழுதும் எப்பொழுதும்
        என்றென்றும் இருப்பதாக. ஆமென்.



        ஓ என் இயேசுவே! 
            ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்.

        செபமாலை மறைபொருள்கள்

        மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கட்கிழமை & சனிக்கிழமை)

        1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தல் 
        2. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் 
        3. இயேசுவின் பிறப்பு. 
        4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தல் 
        5. காணாமற் போன இயேசுவைக் கண்டு மகிழ்தல் 



        ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக்கிழமை)

        1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப்  பெறுதல் 
        2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை
          இரசமாக மாற்றுதல்  
        3. இயேசு இறையரசை பறைசாற்றி, மனமாற்றத்திற்கு அழைத்தல் 
        4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைதல் 
        5. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை நிறுவுதல் 



        துயர்  நிறை மறை உண்மைகள் (செவ்வாய்க்கிழமை & வெள்ளிக்கிழமை)

        1. இயேசு இரத்த வியர்வை சிந்துதல் . 
        2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபடுதல் . 
        3. இயேசுவுக்கு  முள்முடி தரித்தல் . 
        4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் . 
        5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தல் 



         மாட்சி  நிறை மறை உண்மைகள் (ஞாயிற்றுக்கிழமை & புதன்கிழமை)

        1. இயேசு உயிர்த்தெழுந்தார் 
        2. இயேசுவின் விண்ணேற்றம்
        3. தூய ஆவியாரின் வருகை. 
        4. இறையன்னையின் விண்ணேற்பு. 
        5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பெறல் 



        ஜெபமாலை நிறைவில்:  
                         அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம். ஆமென். 




        புனித தேவமாதாவின் பிராத்தனை   


        சுவாமி கிருபையாயிரும்

        கிறிஸ்துவே கிருபையாயிரும்

        சுவாமி கிருபையாயிரும்


        கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

        கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்


        பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

        உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

        தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி



        புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

        சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...

        கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...

        மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...

        கிறிஸ்துவினுடைய மாதாவே...

        தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...

        மகா பரிசுத்த மாதாவே...

        அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..

        பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...

        கன்னி சுத்தங்கெடாத மாதாவே...

        மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...

        ஆச்சரியத்துக்குரிய மாதாவே...

        நல்ல ஆலோசனை மாதாவே,,,

        சிருஷ்டிகருடைய மாதாவே...

        இரட்சகருடைய மாதாவே...

        மகா புத்தியுடைத்தான கன்னிகையே...

        மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...

        பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...

        சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...

        தயையுள்ள கன்னிகையே...

        விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....

        தருமத்தின் கண்ணாடியே...

        ஞானத்துக்கு இருப்பிடமே...

        எங்கள் சந்தோஷத்தின் காரணமே...

        தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...

        ஞான பாத்திரமே...

        மகிமைக்குரிய பாத்திரமே...

        அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...

        தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...

        தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...

        சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...

        வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...

        பரலோகத்தினுடைய வாசலே...

        விடியக்காலத்தின் நட்சத்திரமே...

        வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...

        பாவிகளுக்கு அடைக்கலமே...

        கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...

        கிறிஸ்தவர்களுடைய சகாயமே...

        சம்மனசுக்களுடைய இராக்கினியே...

        பிதா பிதாக்களுடைய இராக்கினியே...

        இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...

        அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...

        மறைசாட்சிகளுடைய இராக்கினியே...

        துதியர்களுடைய இராக்கினியே...

        கன்னியர்களுடைய இராக்கினியே...

        அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...

        ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...

        பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...

        திருச் செபமாலையின் இராக்கினியே...

        சமாதானத்தின் இராக்கினியே...



        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்



        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்



        உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும்
                  
        சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



        ஜெபிப்போமாக :
       
                   
        இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின்
        சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்




        கிருபை தயாபத்து மந்திரம்

        •  கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். 
        • இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். 
        • ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். 
        • இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். 
        • கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

        - இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக

        - சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

        ஜெபிப்போமாக:
                    
        சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
 


        புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:


        • மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். 
        • கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். 
        • பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். 
        • அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
        • ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். 
        • எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 
        -அருள்நிறைந்த மந்திரம் (மூன்று முறை)



        பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக ஜெபிப்போமாக :
        ஒரு பரலோக மந்திரம், ஒரு அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம். 


        பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

        பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு

        • பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். 
        • தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். 
        • உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும்.
        •  வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். 
        • உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. 
        • அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
        • உலர்ந்ததை நனையும். 
        • நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். 
        • வணங்காதை வணங்கப் பண்ணும். 
        • குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். 
        • தவறினதை செம்மையாய் நடத்தும். 
        • உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். 
        • புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.


        சர்வேசுவரா எங்களுக்கு உதவியாயிரும். கர்த்தாவே எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும். பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியில் இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
        வல்லமை மிகுந்த இயேசுவே, சிலுவையில் நீர் கொண்டிருந்த எல்லா ஆசைகளோடும் ,எனது ஆசைகளையும் ஒன்றினைத்து உம்மை கூவி அழைத்து ஏழை பாவிகளுக்காக உமது இரக்கத்தை கெஞ்சி கேட்கின்றேன். அணை கடந்த அருள் பொங்கி வழியும் மகா பரிசுத்த திரு இருதயமே உமது பாடுகளை முன்னிட்டு உம் அன்பால் மீட்ட ஆன்மாக்களின் இழப்பை அனுமதியாதேயும். இயேசுவே ஒவ்வொரு ஆன்மாவும் உமது பாடுகளின் மீதும் இரக்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கட்டும். நீர் உமது இரக்கத்தை எவர் ஒருவருக்கும் மறுப்பதில்லை. வானமும் பூமியும் மாறலாம். ஆனால் உமது இரக்கம் அழிந்து போவதில்லை. இயேசுவே! முடிவில்லா காலமும் உமது இரக்கத்தை மகிமை படுத்தும்படி நான் எல்லா பாவிகளையும் உமது திருப்பாதம் கொண்டு வருகிறேன். உலகம் முழுவதற்க்குமாய் உமது இரக்கத்தை இரஞ்சுகிறேன்.

        யேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் , இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே ! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே ! உலகம் முழுவதையும் உம்முன் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.

        யேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

        விசுவாச பிரமாணம்.

        கர்த்தர் கற்பித்த செபம்.

        மங்கள வார்த்தை செபம் (3 முறை )

        செபமாலையின் பெரிய மணியில்:
        நித்திய பிதாவே! எங்களாண்டவரும் , உமது நேசமகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும் உதிரத்தையும் ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

        செபமாலையின் சிறிய மணியில் :
        அவரது வேதனை நிறைந்த பாடுகள் வழியாக — எம்மீதும் ,அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.
        ஒவ்வொரு பத்து மணி செபமும் கீழ்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
        1. இயேசு இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக.
        2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்டதை தியானிப்போமாக.
        3. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டதை தியானிப்போமாக.
        4. இயேசு சிலுவை சுமந்து சென்றதை தியானிப்போமாக.
        5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை தியானிப்போமாக.
        புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே ! எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். ( 3 முறை)
        இரக்கமுள்ள இயேசுவே! உம்மை நாங்கள் விசுவசிக்கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம். எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரந்தாரும். அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும், உமது மகிமைக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் , உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரம் அருளும்.

        ஆன்மாக்களுக்காக செபம்:

        ஆண்டவரே! உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழிக்கு நடத்திச் செல்லும். இவர்களையும், இவர்களுடையவர்களையும், தீமையின் கொடுமையினின்று பாதுகாத்தருளும். தீமை செய்த அனைவரையும் மீட்டருளும். இறைவனின் இரக்கம் அவர்கள் மேல் இருப்பதாக. என் தேவனே! எனது இறைவனும் எனது அனைத்தும் ஆனவரே! என் யேசுவே இரக்கமாயிரும். இயேசு கிறிஸ்துவே! இரக்கத்தின் அரசே! நான் உம்மை நம்புகிறேன். யேசு , மரி , சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன். ஆன்மாக்களை மீட்டருளும். - ஆமென்.

        இரக்கத்தின் பிரார்த்தனை
        சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
        கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
        சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
        கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

        பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
        உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
        பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
        தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
        அர்ச்சிஷ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

        உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே — இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்.
        சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்
        எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        மகாப்பரிசுத்த திருத்துவத்தின் பரம இரகசியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        கடவுளின் சர்வ வல்லமையை மானிடர்க்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        பரலோக அரூபிகளைப் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        நாங்கள் அடையவிருக்கும் தண்டனைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைத்தூக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        மனித அவதாரத்தையும் பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        சகல மனிதர்க்கும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச்செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        சத்தியத் திருச்சபையை ஸ்தாபித்ததில் நீர் காட்டிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        அருட்சாதனங்களின் கொடைகளில் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        ஞானஸ்நானத்திலும் பட்சாதாபத்திலும் நீர் அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் நீர் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        பாவிகளை மனம் திருப்புவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        நீதிமான்களின் அர்ச்சிப்பில் நீர் வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        உமது மகாப்பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        இரக்கத்தின் தாயாகிய புனித மரியம்மாளை எங்களுக்கு தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்க்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        சகலப்புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        மீட்கப்பட்டவரின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
        அற்புதங்களின் வற்றாதத் துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -

        உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
        — எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
        உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
        — எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
        உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
        — எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

        முதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள், அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.
        துணை: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.

        செபிப்போமாக
        மகாத் தயை நிறை இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே ! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் , உமக்கு பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும் எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும். ஆமென்.
        அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் . . . . . . (உறுதியோடு கேட்கும்) இந்த வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி, உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.


        Comments